இலங்கையின் சக்திவளத்துறை அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா உதவி

228 0
இலங்கையின் சக்திவள துறைகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியாக இலங்கையுடன் வலுவான உறவை பேண தமது நாடு தயாராகவிருப்பதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவுஸ்திரேலியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் அவர் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது