தமிழகத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் கொலையுண்டமை தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை கடற்படையினரால் குறித்த கடற்றொழிலாளர் சுட்டுக் கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதும், இதனை கடற்படையினர் மறுத்துள்ளனர்.
அத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் இலங்கை கடற்படையினரில் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேற்கொண்ட பூர்வாங்க விசாரணைகளில், குறித்த சம்பவத்துடன் கடற்படையினர் தொடர்புபடவில்லை என்பது தெரியவந்திருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

