ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் நகரில் உள்ள முக்கியமான அரச கட்டிடங்கள் மீட்பு.

286 0
ஈராக்கின் மொசூல்நகரில் உள்ள முக்கியமான அரச கட்டிடங்களை அந்த நாட்டின் படையினர் தங்களின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர்.
இந்த பகுதியை முழுமையாக ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மீட்பதற்கான மோதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
சிறுசிறு பகுதிகளாக படையினர் குறித்த நகரை மீட்டு வருகின்ற நிலையில் தற்போது முக்கியமான அரச கட்டிடங்களை மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளாக தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மத்திய வங்கியின் கிளை மற்றும் நூதனசாலை போன்ற தற்போது கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளன.
இதன்படி விரைவில் மொசூல்நகரை தீவிரவாதிகளிடம் இருந்து முழுமையாக மீட்க முடியும் என்று ஈராக்கிய படையினர் தெரிவித்துள்ளனர்.