நாட்டை பாதுகாக்க வேண்டிய எண்ணம் ஆட்சியாளர்களுக்கு கிடையாது: செல்வராசா கஜேந்திரன்

105 0

இலங்கை நாட்டையும் அதன் இயற்கை வளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சந்திப்பில் இன்றையதினம்(10.05.2023) கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில்,

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் சம்பவம் இடம்பெற்று இரண்டு ஆண்டுகளாகிய நிலையில் இன்று வரை இது தொடர்பாக பாரிய சந்தேகங்களும் குழப்பங்களும் கேள்விகளும் தான் இருக்கின்றது.

அப்படியானால் அரசு தரப்பு இந்த விவகாரத்தில் பாரிய முறைகேடுகளில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுகிறது.

இதேவேளை நாடு ஊழல் மோசடிகளிலிருந்து வெளிவர வேண்டுமாக இருந்தால் ஒற்றை ஆட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.