மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு சீர்த்திருத்த நிலையம் ஒன்றில் இருந்து 14 மற்றும் 13 வயதுடைய இரு சிறுமிகள் இன்று திங்கட்கிழமை (08) அதிகாலையில் தப்பி ஓடியுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் சிறுவர் திருமணம் மற்றும் பாலியல்துஷ்பிரயோம் மேற்கொள்ளப்பட்ட சிறுமிகளை சீர்த்திருத்துவதற்காக நீதிமன்றத்தினால் சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.
இந்நிலையில், நீதிமன்றினால் குறித்து சிறுவர் பராமரிப்புக்காக அனுப்பப்பட்ட வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியும் ஏறாவூரைச் சேர்ந்த 13 வயது சிறுமியும் சம்பவதினமான இன்று அதிகாலை 2.30 மணியளவில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பாராமரிப்பு நிலையத்தினர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

