தமிழ் மக்களை தொடர்ச்சியாக பயங்கரவாதிகளாக தான் பார்க்க போகின்றார்களா?

155 0

தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணப்பாடே தையிட்டியில் அரசின் அராஜகத்திற்கு காரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

தையிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈஸ்வரபாதம் சரவணபவன் இன்று (04.05.2023) மாலை 2 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட்ட நால்வருடன் கலந்துரையாடி, கட்டப்பட்ட விகாரையினையும் பார்வையிட்டுள்ளார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தையிட்டியில் கட்டப்பட்டு முடியும் கட்டத்தில் உள்ள விகாரையை நேரடியாக பார்வையிட்டேன்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தாத நிகழ்வுகளை தான் இந்த அரசு மேற்கொண்டிருக்கின்றது. போராட்டங்கள் தொடர வேண்டும்.