போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் புலிகளின் ஆயுதங்களை விற்றுள்ளனர்!

242 0

விடுதலைப்புலிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள், அவர்களது ஆயுதங்களை ஆயுதக் குழுக்களுக்கு விற்றுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது ஆயுதக் குழுக்களிடமிருந்து கைப்பற்றபடும் ஆயுதங்கள் அனைத்தும் விடுதலைப்புலிகளின் பாவனையில் இருந்தவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று நாட்டில் மோசடிக்கார குழுக்களும் ஆயுதக் குழுக்களும் அதிகளவில் உருவாக்கம் பெற்றுள்ளன. நாட்டில் சகல பகுதிகளிலும் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. யுத்தத்தின் பின்னர் புலிகளின் ஆயுதங்களை பாதாள கோஷ்டிகளுக்கு பணத்திற்கு விற்றுள்ளனரா என்ற சந்தேகம் எழுகின்றது.

நாட்டில் அமைதியை உருவாக்கவே நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம். எனினும் ஒருசிலர் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி அதில் அரசியல் வாய்ப்புக்களை உருவாக்க முயற்சிக்கின்றமை நன்றாக வெளிப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.