இலங்கை கடற்படையை கண்டித்து செல்போன் கோபுரத்தில் ஏறி வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்

247 0

மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து, செல்போன் கோபுரத்தில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிஜ்ஜோ குண்டு பாய்ந்து பலியானார். இந்த சம்பவம் ராமேசுவரத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கடற்படையினரின் செயலைக் கண்டித்து, பலரும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ராமேசுவரம் ஜெ.ஜெ. நகர் கார் நிறுத்தம் அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். மாநில இளைஞர் அணி செயலாளர் ஜெரோன், செல்வம், முருகானந்தம் ஆகியோர், கோபுரத்தின் மேல் ஏறி இலங்கை அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.