ஜனாதிபதி இந்தோனேசியாவில்

251 0

இந்தோனேசியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் ஜகார்த்தா நகரிலுள்ள சுகர்னோ ஹட்டா சர்வதேச வானுர்தி தளத்தை சென்றடைந்தார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அந்த நாட்டின் மக்கள் பயன்பாட்டு மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் உள்ளிட்ட தரப்பினர் ஜனாதிபதியை வரவேற்றதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்தோனேசியாவில் நாளைய தினம் இடம்பெறவுள்ள இந்து சமுத்திர வலய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.

இந்து சமுத்திர வலய நாடுகளின் அபிவிருத்தியை குறிக்கோளாக கொண்டு இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

இந்து சமுத்திர வலய நாடுகளின் சமாதானத்தை நிலைநாட்டுதல், நிலையான மற்றும் பரிபூரணமான வளமாக விருத்திசெய்தல் என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

இலங்கை நேரப்படி நாளை முற்பகல் 11 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.