ஜனநாயக போராளிகள் கட்சி, மட்டு.வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்துடன் இணைவு

353 0

வேலையற்ற பட்டதாரிகள் 14வது நாளாக மட்டக்களப்பு நகரில் நடாத்திவரும் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் கட்சியான ஜனநாயக பேராளிகள் கட்சியும் இன்று இணைந்துள்ளது.

இன்று திங்கட்கிழமை காலை கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் க.பிரபாகரனின் தலைமையில் கட்சியின் பல முக்கியஸ்தர்கள் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக அமர்ந்திருந்து போராட்டம் நடாத்தினர்.

கடந்த 14 நாட்களாக தங்களுக்கு நியமனம் வழங்கப்படவேண்டுமென்ற கோரிககையை முன்வைத்து சுமார் 1600 பட்டதாரிள் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்pடத்தக்கது.

இதன்போது பெருமளவான பொலிஸாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
2012ம் ஆண்டிற்குப்பின்னர் வெளியாகிய வேலையற்ற பட்டதாரிகளே இவ்வாறு போராட்டததில் ஈடுபட்டனர்.அவர்களது சாத்தவீகப் பேராட்டத்திற்கு அரசியல் வாதிகள் ஊடகவியலாளர்கள் இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பல்வேறு தரப்பினர் தமது பூரணஆதவை வெளிப்படுத்தியுள்ளனர்.

தீர்வு எட்டப்படும்வரை தமது சத்தியாகிகிரகப் பேராட்டம் தொடரும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் எஸ்.கிசான் தெரிவித்தார்.