ஹட்டனில் மாணிக்கக்கற்களை தோண்ட முயன்ற 6 பேர் கைது

150 0

ட்டன் ஊடாக மகாவலி ஆற்றுக்கு நீரேந்தும் ஹட்டன் ஓயாவை அண்மித்த காட்டுப் பகுதியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக நிலத்தை தோண்டி மாணிக்கக்கற்களை எடுக்க முயன்று சுற்றாடலை மாசுபடுத்திய குற்றத்தினால் சந்தேகத்தின் பேரில் கடந்த புதன்கிழமை (26.04.2023) 6 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேக நபர்கள் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதானவர்கள் அதே தோட்டத்தில் வசிப்பவர்கள் எனவும், அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.