முல்லைத்தீவு மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்து ஐயன்கட்டு கிராம அலுவலர் பிரிவில் ஜீவநகர் மாதிரி கிராமத்தில் வீசிய கடும் காற்றினால் வீடுகள் சில சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வீசிய காற்றினால் முத்துஐயன்கட்டு -முத்துவிநாயகபுரம் பகுதியில் மேலும் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
வெள்ளிக்கிழமை மாலை கடும் காற்றும் மழையும் பெய்துள்ள நிலையில் வீசிய கடும் காற்றினால் வீடு ஒன்றின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த 12 சீற்கள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் வீடு சேதமடைந்துள்ளது.
இதேவேளை கிராமத்தில் உள்ள மேலும் சில வீடுகள் சேதமடைந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். ஓடுகள் தூக்கிவீசப்பட்டுள்ளதுடன் தற்காலிக கொட்டிலில் வசித்துவரும் குடும்பம் ஒன்றின் வீடும் காற்றினால் சேதமடைந்துள்ளது.
கடந்த நாட்களாக கடும் வெப்பம் நிலவிய நிலையில் இரண்டு தினங்களாக குறித்த பகுதியில் கடும் காற்றும் மழையும் பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.