10 வது நாளாக ஐநா திடலை அண்மித்திக்கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப் பயணம்

295 0

தமிழின அழிப்புக்கு நீதி கோரி பெல்ஜியத்தில் ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப் பயணம் 10 வது நாளாக இன்றைய தினம் ஜெனீவா நகரை அண்மித்துக் கொண்டிருக்கின்றது. குளிரான காலநிலையில் மனிதநேய செயற்பாட்டாளர்கள் மாவீரர்களையும் மக்களையும் மனதில் நிறுத்தி தளராத உறுதியுடன் பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.

ஜெனிவா நகரத்துக்கு மேலும் 30 km உள்ளது . நாளைய தினம் ஈருருளிப் பயணம் ஜெனீவாவுக்கு வந்தடைந்து மாபெரும் பேரணியில் இணைந்து இறுதியில் ஐநா மனிதவுரிமை ஆணையாளர் காரியாலயத்துடன் சந்திப்பை மேற்கொள்ளவிருக்கின்றனர்.ஈருருளிப் பயணம் ஊடறுத்து வந்த நகரங்களில் உள்ளூர் ஊடகங்கள் இப் பயணம் சார்ந்து பிரசுரித்ததும் குறிப்பிடத்தக்கது.