இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதிகளில் போடப்பட்ட பாதுகாப்பு வேலிகள்…..(காணொளி)

260 0

 

முல்லைத்தீவு இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதிகளில் போடப்பட்ட பாதுகாப்பு வேலிகள் முட்கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தங்களது காணிகளை விடுவிக்குமாறு கோரி மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தையடுத்து குறித்த வேலிகள் நேற்றைய தினம் அகற்றப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் தங்களது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஒரு மாதகாலமாக புதுக்குடியிருப்பு பிரதேச செலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி முதல் இப்பகுதி மக்கள் தமது காணி தொடர்பிலான போராட்டத்தினை மீண்டும் ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதங்களில் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை இயங்கிய தனியார் காணியினை அண்டிய மூன்று காணிகளின் பிரதான நுழைவாயில்களில் முட்கம்பிச்சுருள்கள் போடப்பட்டு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அத்துடன் போராட்டம் நடைபெற்ற பகுதியின் முன்பாகவுள்ள மூன்று பிரதான வாயில்களும் மூடப்பட்டிருந்தன.

நேற்று குறித்த பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 19 ஏக்கர் காணிகளில் 7.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதையடுத்து மக்களின் போராட்டமும் கைவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்தே பாதுகாப்பு வேலிகள் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.