இந்த வருட ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 21 இல்

307 0

Scholarship-exam.-415x2601-415x260இந்த வருடத்திற்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதனை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் 2 ஆயிரத்து 959 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளன.
இதற்காக 3 லட்சத்து 50 ஆயிரத்து 701 பரீட்சார்திகள் தோற்றவுள்ளனர்.
இதேவேளை, விண்ணப்பதாரிகளின் பரீட்சை நுழைவுச்சீட்டுக்கள் பாடசாலைகளின் அதிபர்களுக்கு நேற்றைய தினம் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்  தெரிவித்துள்ளது.
குறித்த நுழைவுச்சீட்டுக்கள் கிடைக்கப் பெறாவிட்டால் எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னதாக 1911 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு அறிவிக்குமாறு அந்த திணைக்களம் கோரியுள்ளது.