இலங்கை தமிழரசுக் கட்சியில் இன்று புதிய இளைஞர்கள்(காணொளி)

288 0

இலங்கை தமிழரசுக் கட்சியில் இன்று புதிய இளைஞர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

தமிழரசுக்கட்சியின் பருத்தித்துறை அலுவலகத்தில் கட்சியில் அங்கத்துவம் வகிக்க விரும்பிய 44 இளைஞர்கள் இன்றையதினம் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாவிடம் தமது விண்ணப்பங்களை கொடுத்து தமது அங்கத்துவத்தை பதிவுசெய்து கொண்டனர்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பருத்தித்துறை தொகுதி கிளை அலவலகத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 44 இளைஞர்கள் கட்சியின் அங்கத்துவப்படிவத்தை பூரணப்படுத்தி கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாவிடம் கையளித்து அங்கத்துவர்களாக தம்மைப் பதிவு செய்து கொண்டனர்.

இளைஞர்களைக் கட்சியில் புதிதாக இணைத்துக்கொள்ளும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் மாகாண சபை உறுப்பினர்களான யோ.சிவயோகன், தர்மலிங்கம் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.