மழை பெய்த போதிலும் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு நீர் போதவில்லை

221 0

மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளின் ஒரளவு கடும் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் மின்னுற்பத்தி செய்வதற்கு தேவையாள அளவு நீர் கிடைக்கபெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.

கடந்த தினங்களில் பெய்த கடும் மழையினால் நீர்நிலைகளில் தசம் 3 வீத நீரே அதிகரித்துள்ளதாக அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஸண ஜயவர்தன தெரிவித்தார்.