மனைவியை அடித்துக் கொன்ற கணவன்

75 0

ரநாயக்க – உஸ்ஸாபிட்டிய, அரவபொல பிரதேசத்தில் தனது மனைவியை கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் நேற்று (08) இரவு இடம்பெற்றுள்ளது.

இக்கொலையுடன் தொடர்புடைய கணவர் இன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் ஒரு பிள்ளையின் தாய் எனவும், தனிப்பட்ட தகராறு காரணமாக அவரது வீட்டில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.