தமிழீழத்தின் இசை குயில் புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. சாந்தன் அவர்களுக்கு நெதர்லாந்து வாழ் தமிழ் மக்களால் எழுச்சியுடன் நினைவு வணக்க நிகழ்வு நடத்தப்பட்ட்து .

349 0
05.03.2017 அன்று நெதர்லாந்தின் அல்மேரே     நகரில் தமிழீழ புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. சாந்தன் அவர்களுக்கு வணக்க நிகழ்வு.   மாலை18 .00மணிக்கு தொடங்கி 20 .00மணி வரை நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ,தேசியக்கொடிஏற்றல் ஈகைச்சுடர் ஏற்றலை  தொடர்ந்து இதில்  மக்கள் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்வில் பலர் மாமனிதர் திரு. சாந்தன் பற்றிய கவிதைகளும், சிறப்புரைகளும் ஆற்றினார்கள்.
அத்துடன் மாமனிதர் திரு. சாந்தன் அவர்கள் பாடிய சில புரச்சிப்பாடல்களையும் நெதர்லாந்து தமிழமுதம் இசைக்குழு பாடகர்கள் பாடி மரியாதை செலுத்தினார்கள்.

மாமனிதர் S.G சாந்தன் அவர்களின் வணக்கப்பாடல் நெதர்லாந்து
பாடல்வரிகள்:- தமிழ்மணி
பாடியவர்:- நிரோசன்
இசை:- இரா.சேகர்