முல்லைத்தீவு மூன்று முறிப்பு பகுதியில் வயோதிபரின் சடலம் மீட்பு

193 0

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு மூன்று முறிப்பு குதியில் வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று (05.04.23) மீட்கப்பட்டுள்ளது.

மேலும் மூன்று முறிப்பு பகுதியில் மாடு மேய்ப்பதற்காக சென்றவர்களால் வயல் வெளி வீதி ஓரத்தில் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.இது தொடர்பில் நெட்டாங்கண்டால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளார்கள்.

இதன்போது வவுனியா முள்ளிக்களும் பகுதியினை சேர்ந்த 70 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை நெட்டாங்கண்டல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.