குடுசாலிந்துவிற்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பான என விசாரணை

63 0

குடுசாலிந்து என அழைக்கப்படும் சலிந்து மல்சித்த குணரட்ணவிற்கு பயங்கரவாத அமைப்புகளுடன் உள்ள தொடர்புகுறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்திற்கு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

குடுசாலிந்துவிற்கு விடுதலைப்புலிகள் ஆதரவு குழுக்கள் மற்றும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் உள்ள தொடர்புகள் குறித்து ஆராய்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடுசாலிந்துவின் 10 குற்றங்களை  விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

குடுசாலிந்தும் அவரது சகாவும் மடகாஸ்கரில் கைதுசெய்யப்பட்ட பின்னர் சிஐடியினர் அங்குசென்று இவர்களை நாட்டிற்கு அழைத்துவந்தனர்.