தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு : புத்தளத்தில் சம்பவம்

231 0

தலை துடிக்கப்பட்ட நிலையில், சடலமொன்று புத்தளம் கால்வாய் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த சடலம் கண்டு பிடிக்கப்படும் போது உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளதோடு, தலை பகுதி துண்டிக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த சடலம் தொடர்பான நீதவான் விசாரணையை தொடர்ந்து, சடலம் புத்தளம் ஆரம்ப வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சடலம் மீட்பு, தொடர்பான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.