கொலன்னாவ பகுதியில் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு

86 0

நேற்றிரவு (30) கொலன்னாவ சிங்கபுர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விடுவிக்க முற்பட்ட குழுவினரை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க மற்றும் அதிகாரிகள் குழுவினர் கொலன்னாவ சிங்கபுர விளையாட்டரங்கம் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போது ஒருவர் கையில் எதையோ எறிவதை கண்டுள்ளனர்.

சந்தேக நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வர முற்பட்ட போது, ​​உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பொலிஸ் ஜீப்பை சுற்றி வளைத்து சந்தேக நபரை பொலிஸ் பிடியில் இருந்து விடுவிக்க முயற்சித்த போது அவர்களை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

44 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.