மஹிந்தவுக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சவால்

246 0

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சவால் விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

பிணை முறி விநியோகம் தொடர்பில் தம்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி சார்பில் நிதி அமைச்சருக்கு எதிராக தாம் வழக்குத் தொடுக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.