நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிரான மனுக்கள் மீதான மீளாய்வு ஒத்தி வைப்பு

65 0

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு மனுக்கள் மீதான மீளாய்வினை மே 22ஆம் திகதி வரை ஒத்தி வைப்பதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (30)  இம்மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ் வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.