ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியிலிருந்து இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துக் கட்டணம் அதிகரிப்பு

327 0

assஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியிலிருந்து இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி பேருந்துக் கட்டணங்கள் 100 இற்கு 9 ரூபாவால் அதிகரிக்கப்படுமெனவும், இனிவரும் காலங்களில் கடைசித் தொகையாக 9 ரூபாவே அறவிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு செலவுகள் அதிகரித்துள்ளதாலேயே கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.