ஹோமாகமவில் பஸ், மோட்டார் சைக்கிள் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிப் பிரயோகம்!

80 0

ஹோமாகம மாபுல்கொட பிரதேசத்தில் 25 ஆம் திகதி சனிக்கிழமை இரவு கராஜ் ஒன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மற்றும் முச்சக்கர வண்டி மீது T -56 துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில்  எவருக்கும் காயம் ஏற்படவில்லை, இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.