வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்கிறது

242 0

வடக்கில் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட காலவறையற்ற வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.

தங்களுக்கான நிரந்தர வேலை வாய்ப்புகளைக் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளும் காலவரையரையற்ற சத்தியாகிரக போராட்டத்தினை நேற்று ஆரம்பித்துள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்றப் பட்டதாரிகளும் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.