சர்வதேச நீதிபதிகளை நாட்டுக்குள் கொண்டு வர தாம் ஒருபோதும் தயாரில்லை – ஜனாதிபதி

233 0

சர்வதேச நீதிபதிகளை நாட்டுக்குள் கொண்டு வர தாம் ஒருபோதும் தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நிறைவேற்று சபை மற்றும் அகில இலங்கை செயற்குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுயாதீனத்தன்மை மற்றும் இறைமை என்பவற்றை பாதுகாப்பதற்காக தாம் தொடர்ந்தும் முன்னிலையாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.