அம்பாறையில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து

67 0

ம்பாறை, இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதினாபுரம் – அக்கரைப்பற்று பிரதான வீதியில் உள்ள சந்தையருகில் இன்று (22) காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் இறக்காமம் 4ஆம் பிரிவை சேர்ந்த அமீர் என்பவர் ஆவார்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அமீர் என்பவரோடு மற்றொரு நபரும் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோதே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த நபரின் உடல் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.