சரணடைந்த ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் கைது!

67 0

ருஹுணு பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஈடுபட்டார்கள் எனக் கூறப்படும் மாணவர்கள் இருவர் இன்று  (21)காலை கம்புறுப்பிட்டி பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதி காப்பாளருக்கும் கம்புறுப்பிட்டி தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக  விடுதி காப்பாளர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த இரண்டு மாணவர்களும் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பல்கலையில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரே  கைது செய்யப்பட்டுள்ளனர்.