யாழ். குடத்தனையில் விபத்து ; ஒருவர் உயிரிழப்பு

86 0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியைச் சேர்ந்த சின்னையா கணேசசிங்கம் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பன் பகுதியில் இருந்து பருத்தித்துறை நோக்கி மணல் ஏற்றி வந்த கனரக வாகனமும் , பருத்தித்துறையில் இருந்து மருதங்கேணி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்கு உள்ளானது.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் கனரக வாகன சாரதியை கைது செய்துள்ளனர்.