திருகோணமலையில் உணவக உரிமையாளரின் மோசமான செயல்!

84 0

திருகோணமலை- மஹதிவுல்வெவ பிரதேசத்திலுள்ள உணவகமொன்றிற்கு நேற்று (20.03.2023) மாலை சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஹொரவ்பொத்தானை சந்தையிலிருந்து வீசப்படுகின்ற மரக்கறிகளை கொண்டு வந்து சமைப்பதற்கு பயன்படுத்தி வருவதுடன் அதனை சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும் கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த உணவகத்தை சோதனையிட்டபோது உணவகத்திற்கு பின்னால் வெவ்வேறாக மரக்கறி வகைகள் குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மரக்கறிக்கு மேலால் நாய் உறங்கிக் கொண்டிருப்பதை அவதானித்ததாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.அத்துடன் பாவனைக்கு பயன்படுத்த முடியாத உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.