அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று!

105 0

ன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (19) அனுஷ்டிக்கப்படுகிறது.

இவர் மட்டக்களப்பில், இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக நீரை மட்டுமே அருந்தி, சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த பெண்மணி ஆவார்.

இவரது உண்ணாவிரத போராட்டம் 1988 மார்ச் 19ஆம் திகதி தொடங்கி சரியாக ஒரு மாதத்தின் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவாறே ஏப்ரல் 19ஆம் திகதி உயிர் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.