13 மூலமாக தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க முடியாது – அநுரகுமார

70 0

தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படும் தீர்வு ஒருபோதும் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

‘அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமாகவோ அல்லது அதனை மாற்றியமைப்பதன் மூலமாகவோ தமிழர் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வை வழங்க முடியாது. அனைத்து இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு அதன்மூலமே தமிழருக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும். தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படும் தீர்வு ஒருபோதும் தமிழருக்கு நிரந்தர தீர்வாக அமையாது. இதனை தமிழ் மக்களின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனும் கூறியுள்ளார். எனவே, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு தமிழர் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்’ என அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.