கொட்டகலை ரொசிட்டா பகுதியில் குழந்தை ஒன்று வீட்டின் மாடிப்படியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளது(காணொளி)

249 0

 

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பகுதியில் குழந்தை ஒன்று வீட்டின் மாடிப்படியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

கமலதாசன் சீதையம்மாளின் ஒன்றரை வயது நிரம்பிய இரண்டாவது புதல்வி வஸ்மிளா பெற்றோர்களின் கவனயீனத்தினால் தனது வீட்டின் மாடிப்படியிலிருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது தாய் மற்றும் பாட்டி வீட்டில் இருந்துள்ளதுடன் அவர்கள் வேலை செய்துக் கொண்டிருந்த வேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்புடுகிறது.

உடனடியாக பாதிப்புக்குள்ளான சிறுமி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது சிறுமி மரணமடைந்ததாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரேத பரிசோதனைகளின் பின் சிறுமியின் சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.