சத்தியாக்கிரக போராட்டம் பத்தாவது நாளாக…(காணொளி)

491 0

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் பத்தாவது நாளாக இன்றையதினமும் முன்னெடுக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமது சத்தியாக்கிரக போராட்டத்தை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்னெடுத்து வருகின்றனர்

மட்டக்களப்பில் நேற்று மாலை முதல் அடைமழை பெய்து வருகின்றது. இந்த அடைமழையிலும் தமது போராட்டத்தினை அவர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றனர்.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள்  தெரிவித்துள்ளனர்.