13 இந்திய மீனவர்கள் கைது

248 0

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுப்பட்ட 13 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

வெற்றிலைக்கேணி சுண்டிக்குள கடற்பரப்பில் 9 மீனவர்களும், நெடுந்தீவு கடற்பரப்பில் 04 மீனவர்களும் அவர்களின் இரண்டு விசைப்படகுகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளன.

குறித்த மீனவர்களை இன்றைய தினம் யாழ் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் ஜகாதாப்பட்டினம், இராமேஸ்வரம், புதுக்கோட்டை ஆகிய பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.