யாழ்.நகரில் நகைக்கடை உரிமையாளரும் அங்கு பணியாற்றிய பெண்ணும் உயிர்மாய்ப்பு

157 0

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரும் குறித்த நகைக்கடையில் பணி புரியும் பெண்ணொருவரும் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் உடற்கூற்று பரிசோதனையின் பின்னே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.