சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்களும் ஆணொருவரும் கைது

155 0

பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்த தமது  பிள்ளைகளின் புத்தகப் பைகளை வீட்டுக்கு வெளியில் வைத்துவிட்டு அவர்களை வீட்டு முற்றத்தில் விளையாடுமாறு கூறிவிட்டு வீட்டுக்குள் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பெண்களும் ஆண் ஒருவரும் இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடு ஒன்றில்  இடம்பெற்ற இந்தச்  சூதாட்டத்தின் போது இங்கிரியவின், ரம்புக்கனகம பிரதேசவாசிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் குறித்த வீட்டை சுற்றிவளைத்த போது குறித்த பெண்கள் பொலிஸாரிடமிருந்து தப்பித்து மறைந்துகொள்ள முயற்சித்ததாகவும் ஆனால் அவர்கள் மெத்தையின் கீழ் மறைந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.