ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

305 0

பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் மேலும் 6 மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடிதம் ஒன்றின் ஊடாக ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச  தெரிவித்துள்ளார்.

நாளைய தினத்துடன் இந்த ஆணைக்குழுவின் காலம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.