சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டனர்

246 0

களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான பெரும்பாளான குற்றவாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்த குற்றத்தை திட்டம் தீட்டிய பிரதான நபர் இதில் உள்ளடங்குவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு காவற்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த குற்றவாளிகளை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

அவர்களில் பலர் போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், அதனை தடுப்பதற்காக கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் அவர்களின் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதலில் இரண்டு சிறை அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.