கடலில் மூழ்கி மாணவன் பலி

268 0

பெந்தொட்ட கடலில் நீராட சென்று அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன பாடசாலை மாணவர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 9.00 மணியளவில் கடற்படை நீர்மூழ்கும் அதிகாரிகளால் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 15 வயதான பாடசாலை மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரு மாணவர்களுடன் இவர் நேற்று பெந்தொட்ட கடலில் நீராட சென்றுள்ள நிலையில், அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதன்போது இருவரை பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளனர்.

உயிரிழந்துள்ள மாணவனின் சடலம் காலி – கராபிட்டிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.