நீதிமன்றத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் – பாதாள குழு உறுப்பினர் ஒருவரை கொலை செய்ய கொண்டுவரப்பட்டதா?

401 0
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று மீட்கப்பட்ட ஆயுதங்கள், பாதாள குழு உறுப்பினர் ஒருவரை கொலை செய்வதற்காக கொண்டுவரப்பட்டவை என்று சந்தேகிக்கப்படுகிறது.
காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
பாதாள குழு ஒன்றின் தலைவரான தெமுனி, ஹெரால்ட் ரோஹன என்ற கொனாகோவிலே ரோஹா என்பவரை கொலை செய்வதற்காக இந்த ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் விசேட காவற்துறை குழு ஒன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.