சிறிலங்கா சுதந்திர கட்சியின் கூட்டங்கள் இன்று

277 0
சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு, நிறைவேற்று சபை மற்றும் அகில இலங்கை செயற்குழு ஆகியவற்றின் கூட்டங்கள் இன்று நடைபெறவுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து தீர்மானங்கள் பல மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த கூட்டங்களை மகிந்த அணியினர் புறக்கணிக்கவுள்ளனர்.
மகிந்த ராஜபக்ஷவின் மிரிஹானை இல்லத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது,இது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.