கட்டுநாயக்கவில் பெண்கள் கவனயீர்ப்பு போராட்டம்

93 0

ர்வதேச மகளிர் தினத்தையொட்டி கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மணிக்கூட்டுக் கோபுரத்தின் அருகே நேற்று (12) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

‘வியர்வைத் துளிகளின் கூட்டமைப்பு’ எனும் சுதந்திர வர்த்தக வலய பெண்களுக்காக செயற்படும் அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த அமைப்பு மனித உரிமைகள், பெண்களின் உரிமைகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பில் செயலாற்றி வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டுநாயக்க மற்றும் பியகம ஆகிய தொழில் வலயங்களில் பணியாற்றும் பெண்தொழிலாளர்கள் பங்குபற்றினர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு, தமது உரிமைகள் தொடர்பாக எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியிருந்தனர்.