பளையில் கண்ணிவெடி

125 0

பளை வீமன்காமம் பகுதியில் நிலக்கண்ணிவெடி ஒன்று அவதானிக்கப்பட்டமை தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

காணி உரிமையாளர் வெடிபொருள் ஒன்று இருப்பது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய தற்பொழுது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யுத்த காலத்தில் குறித்த பிரதேசம் இராணுவ உயர் பாதுகாப்பு வலையமாக இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டது.

இதேவேளை, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று நிலக் கண்ணிவெடியை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.