மட்டக்களப்பு, ஆயித்தியமலை வயல் பகுதியில் நபரொருவர் உழவு இயந்திரத்தை செலுத்தி வயல் உழுதுகொண்டிருந்தபோது உழவு இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்ததில், அதனை செலுத்திய நபர் உயிரிழந்த சம்பவம் நேற்று (11) சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயித்தியமலை நெல்லூரைச் சேர்ந்த 34 வயதுடைய தர்மதாசா சதீஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உழவு இயந்திரத்தின் பின்பக்க டயர்கள் நிலத்தில் புதைந்ததால் உழவு இயந்திரத்தின் முன்பகுதி மேலெழுந்து தலைகீழாக கவிழ்ந்ததையடுத்து வாகனத்துக்குள் இருந்த சாரதி கீழே விழுந்து, கலப்பையில் தலை அடிபட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் உடலை பொலிஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

