மின்சார கட்டண அதிகரிப்பை கண்டித்து வவுனியாவில் போராட்டம்

187 0

வவுனியா-வெளிக்குளத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நேற்று (11.03.2023) தீப்பந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

மின்சார கட்டண அதிகரிப்பை கண்டித்து இப்போராட்டம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் தீப்பந்தங்களை ஏந்தியிருந்ததுடன் அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.