வசந்த முதலிகேயின் விடுதலைக்கு எதிரான மேன்முறையீட்டு மனு விசாரணை 27 ஆம் திகதி!

57 0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலியை விடுதலை செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுப்பதற்கு எதிர்வரும் 27ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள வசந்த முதலிகேவை அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வசந்த முதலியை போதிய சாட்சியங்கள் இல்லை எனக் கூறி அவரை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.